உலகச் செய்தி

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் வட மாகாணத்திற் விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் வட மாகாணத்திற்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மே 27 இலிருந்து 29 வரை மேற்கொண்டார்.

Discussing central role of religious leaders in reconciliation with Hindu chief priest at Nallur Temple.

Discussing central role of religious leaders in reconciliation with Hindu chief priest at Nallur Temple.

அவரது விஜயத்தின் போது, அவர் வட மாகாண முதலமைச்சர், சி.வி.விக்கினேஸ்வரன்; யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை; முல்லைத்தீவிலுள்ள பாதுகாப்புப் படைகள் உதவிக் கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் சுதந்த ரனசிங்க; தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சித்தார்த்தன் அதே போன்று கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், தலைவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்; மற்றும் அரசாங்க அதிபர், திரு. என்.வேதநாயகம் ஆகியோரைச் சென்று சந்தித்தார். அவர் மரபுச் சின்னமான நல்லூர் கோவிலுக்கு விஜயம் செய்ததுடன் நல்லூர் ஆதீனத்தின் தலைவர் மற்றும் அகில இலங்கை இந்துக் காங்கிரஸின் பிரதித் தலைவர் கலாநிதி. ஆறு திருமுருகனையும் சந்தித்தார். அத்தோடு அவர் யாழ்ப்பாணத்துக்கான ஆயர், வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் அவர்களையும் சந்தித்தார். திரு. டோரிஸ் வளலாய் மற்றும் பலாலி தெற்கிலுள்ள புதிதாக மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள் மற்றும் கேப்பாபிளவு மீள்குடியமர்த்தப்பட்ட கிராமத்திற்கும் விஜயம் செய்தார், இவையிரண்டும் யு.என்.எச்.சி.ஆர் இனால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. முகமாலையில் ஹொலோ டிரஸ்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் எவ்வாறு ஆயிரக் கணக்கான நிலக் கண்ணிவெடிகள் உள்ள நிலத்தை துப்பரவாக்குகின்றன அதனால் அவை உள்ளூர்ச் சமூகங்களால் மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்பதை முதல் தடவையாக, நேரடியாகக் கண்டார். புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில், ஆசியா பவுண்டேஷன்ஸ் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் ஒரு நிகழ்ச்சித்திட்டம் எவ்வாறு சிறந்த பொலிஸ் சமூகமயப்படுத்தல் நடைமுறைகளை அமுல்படுத்துகிறது மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களை கையாள்வதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை தயார் செய்வதற்கு உதவுகிறது என்பதையும் அவர் கண்டார். அத்தோடு அவர், முள்ளியவளையிலுள்ள இலங்கையை ஒற்றுமைப்படுத்தும் நல்லிணக்க நிலையத்தில், நல்லிணக்கம் மற்றும் உள்ளிணைந்த தன்மை என்பவற்றின் எண்ணங்களை மேம்படுத்துவதில் பணியாற்றும் இளம் அணியையும் அவர் சந்தித்தார்.

உயர் ஸ்தானிகர் யாழ்ப்பாணத்தில் நவீன பிரிட்டிஷ் கவுன்சில் நிலையத்திற்கு விஜயம் செய்தார், அங்கு ஆங்கில மொழி மற்றும் கலாச்சாரத் தொடர்புகளை ஐக்கிய இராச்சியம் எவ்வாறு மேம்படுத்துகிறது மற்றும் ஐக்கிய இராச்சியத் தகுதிகளைப் பெற விரும்புவர்கள், ஆங்கிலத்தில் கற்றும் மற்றும் தொழில் செய்வதற்கு அல்லது ஐக்கிய இராச்சியத்தில் கல்வி கற்பதற்கு விரும்புவர்களுக்கு சேவையாற்றுகிறது என்பதையும் கண்டார். அவர் யாழ்ப்பாணத்தின் அடையாளமான யாழ்ப்பாண நூலகத்திற்கு சென்று ஊழியர்கள் மற்றும் மாணவர்களையும் சந்தித்தார். வளலாய் எனுமிடத்திலுள்ள மாஸ் அக்டிவ் தனியார் நிறுவனத் தொழிற்சாலை இரண்டு வருடங்களுக்கும் குறைவான ஒரு காலப் பகுதியில் செயற்பாடுகளை ஆரம்பித்து எவ்வாறு இன்று ஆயிரத்திற்கும் அதிகமான உள்ளூர் மக்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை வழங்குகின்றது என்பதைக் கண்டார்.

தனது விஜயம் தொடர்பாகக் குறிப்பிட்ட, திரு. டோரிஸ், “எனக்கு இதுவொரு மிகவும் பயனுள்ள மற்றும் சுவாரசியமான விஜயமாக இருந்தது. மிகவும் வெவ்வேறுபட்ட நிலைகள் மற்றும் நிலைமைகளிலுள்ள அனைத்து விதமான மக்களிடமிருந்து அதிகமானவற்றை நான் கற்றுக் கொண்டேன். எனது பதவி போன்றதிலுள்ள எவருக்கும், இலங்கையின் வடக்கில் வாழும் மக்களின் கஷ்டங்கள் மற்றும் வாய்ப்புகள், நம்பிக்கைகள் மற்றும் கவலைகளை விளங்கிக் கொள்வது அத்தியாவசியமானதாகும். கடந்த பல வருடங்களின் நிகழ்வுகள் ரணமாகப் போயிருந்த அநேகமான ஆட்களின் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை மற்றும் திறந்த தன்மை என்பவற்றினால் நான் நெகிழ்ந்து போனேன் என்பதோடு அவர்கள் சிறந்த காரணத்தோடு, ஒரு பிரகாசமான எதிர்காலத்துக்கு முன்னோக்கிப் பார்த்திருக்கின்றனர்,” என்று கூறினார்.

வெளியிடப்பட்ட தேதி 31 May 2015