இலங்கை வெற்றியாளர்கள் தெற்காசிய விசாரணையாளர் விருதுகளை பிரித்தானிய உயர் ஸ்தானிகரிடமிருந்து பெற்றனர்
தொம்ஸன் பவுன்டேஷன், இலங்கை இதழியல் கல்லூரியோடு கூட்டிணைந்து, புலனாய்வு அறிக்கையிடுதலுக்கான 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை விசாரணையாளர் விருதுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
அந்த விருதுகளாவன:
அச்சு ஊடகம் – ககானி வீரக்கோன், சிலோன் டுடே
தொலைக்காட்சி – உப்பேந்திரா ஹேரத், ஹிரு தொலைக்காட்சி
வானொலி – புலன்விசாரணை அறிக்கையிடல் அணி, நெத் எஃஎம்
மூன்று வெற்றியாளர்களும் ஆழமான, உண்மையான மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆய்வுகளை படைத்திருந்தனர். இண்ட னில் ஒரு வார கல்விச் சுற்றுலாவை வெல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்துக்காக பங்களாதேஷிலிருந்தான விண்ணப்பங்களுக்கு எதிராக அவர்கள் ஒரு பிராந்திய ரீதியான தெரிவு செய்யப்படுதலுக்கான இறுதிச் சுற்றுக்கு செல்வார்கள். பிராந்தியப் போட்டியின் இறுதி முடிவுகள் ஏப்பிரல் 14 ஆம் திகதியளவில் அறிவிக்கப்படும்.
இலங்கையின் மூன்று வெற்றியாளர்களுக்குமான சான்றிதழ்கள் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகரான, ஜோன் ரான்கின் அவர்களால், வெள்ளிக் கிழமை, ஏப்பிரல் 4, 2014 அன்று வழங்கப்பட்டது. நிகழ்வின் போதான அவரது உரையில், உயர் ஸ்தானிகர் ஆய்வுகளின் உயர்ந்த தரத்துக்காக வெற்றியாளர்களைப் பாராட்டினார். “தொம்ஸன் பவுன்டேஷன உடன் இணைந்து இலங்கை இதழியல் கல்லூரி, இந்த பயிற்சிச் செயலமர்வுகளை மேற்கொள்வதற்கு, இலங்கையில் இந்த விருதுகளை முன்னெடுப்பதற்கு இயலுமாக இருந்தமையையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். விசேடமாக இந்த நாட்களிலும் மற்றும் தகவல்கள் அதிகளவுக்கு பல்வேறு வடிவங்களிலும் கிடைக்கும் இந்த காலகட்டத்தில், பொதுமக்களுக்கு சிறந்த முறையில் அறிவிப்பதற்கு புலனாய்வு ஊடகத்துறை அத்தியாவசியமாகும்”, எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டம் கொழும்பு பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தால் உதவியளிக்கப்பட்டது.